கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? How to Apply KIssan credit card

 

கிசான் கிரெடிட் கார்டு :

கிசான் கிரெடிட் கார்டு என்பது இந்திய அரசின் ஒரு திட்டமாகும். இதன் மூலம் பயிர் சாகுபடி செய்வதற்கும், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பிற்கும்  குறைந்த  வட்டி விகிதத்தில் அரசாங்கம் கடன்களை வழங்குகிறது. கிசான் கிரெடிட் கார்டு திட்டம் 1998 இல் தொடங்கப்பட்டது..இந்த திட்டத்தின் கீழ் ஒரு விவசாயி மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ், ஒரு விவசாயி அனைத்து வசதிகளையும் பெறுகிறார். இதனால் இந்த நெருக்கடி நேரத்தில் தனது நிதி தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும். 


நபார்ட்,  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India), ஆக்சிஸ் வங்கி (Axis Bank), பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank), பாங்க் ஆப் இந்தியா (Bank of India), எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank) மற்றும் ஐ.டி.பி.ஐ (IDBI) ஆகிய வங்கிகள் கிசான் கிரெடிட் கார்டை வழங்குகின்றன.

யார் விண்ணப்பிக்க முடியும்?

இந்த திட்டத்தின் கீழ், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போர், குத்தகை விவசாயிகள், சுய உதவிக்குழுவினர் அனைவரும்  விண்ணப்பிக்கலாம். இதற்கான நிபந்தனை என்னவென்றால், விண்ணப்பதாரர் விவசாயத்துடன் தொடர்புடையவரக இருக்க வேண்டும்.  இதற்கு 18 முதல் 75 வயது வரையிலான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். ஆனால் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிக்கு, இணை விண்ணப்பதாரர் இருப்பது அவசியம். மற்றவரின் நிலத்தில் விவசாயம் செய்யும் ஒருவர் கூட இந்த உழவர் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது இந்த திட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. 

கிசான் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

படி 1: எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, பிஎன்பி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி… அதாவது எந்த வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கும் செல்லுங்கள்.

படி 2: KCC க்கு விண்ணப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்க.

படி 3: KCC படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்யுங்கள்.

படி 4: இந்த படிவத்தை வங்கியின் அருகிலுள்ள கிளைக்கு சமர்ப்பிக்கவும்.

படி 5: கடன் அதிகாரி உங்கள் படிவத்தை மதிப்பாய்வு செய்வார்.

படி 6: பயன்பாட்டு குறிப்பு எண்ணைச் சேமிக்கவும்.

படி 7: கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டதும், கிசான் கிரெடிட் கார்டு அனுப்பப்படும்.

கிசான் கிரெடிட் கார்டுக்கு தேவையான ஆவணங்கள்

1. முழுமையாக நிரப்பப்பட்ட KCC விண்ணப்ப படிவம்

2. ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம் போன்ற புகைப்பட அடையாள ஆதாரம்.

3. நில ஆவணங்கள்.

4. இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

5. வங்கி கோரிய பிற ஆவணங்கள்.

KCC-யின் கீழ் எவ்வளவு கடன் மற்றும் வட்டி விகிதம்:

கிசான் கிரெடிட் கார்டின் கீழ், ஒரு விவசாயி, குறுகிய காலத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கடன் வாங்கிய பின்னர் விவசாயி தனது நிலத்தை அடமானம் வைக்க வேண்டும். விவசாயி கடனுக்கு 7 சதவீத வட்டி செலுத்த வேண்டும். ஆனால் விவசாயி சரியான நேரத்தில் கடனை செலுத்தினால், அவருக்கு வட்டிக்கு மூன்று சதவீத சலுகை வழங்கப்படுகிறது. அதாவது, அவர் 4 சதவீத வீத  வட்டி  மட்டுமே செலுத்த வேண்டி இருக்கும்.

கிஸான் கடன் அட்டை திட்டத்தின் பயன்கள்:

1. இந்த கிஸான் கடன் அட்டை திட்டம் விவசாயிகளுக்கு குறுகிய கால கடனை 4 சதவிகித வட்டியில், சரியான நேரத்தில் திரும்ப செலுத்த வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் வழங்குகிறது.

2. அரசுடமையாக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியின் படி, விவசாயிகள் சரியான நேரத்தில் காலம் தாழ்த்தாது கடனை திரும்ப செலுத்தி விட்டால் அவர்களது கடனுக்கான வட்டி விகிதம் 3 சதவிகிதம் என தள்ளுபடி செய்யப்படும். அதே சமயம் காலம் தாழ்த்தி கடனை திரும்ப செலுத்தினால் கடன் தொகைக்கு வங்கி 7 சதவிகிதம் வட்டி வசூலிக்கும்.

3. கிஸான் கடன் அட்டை பயன்தாரர் சரியான நேரத்தில் தனது கடனுக்கான மாத தவனையை செலுத்தினால், இந்த அட்டையின் கடன் வரம்பு ரூபாய் 3 லட்சம் வரை அதிகரிக்கப்படும்.

4. இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ரூபாய் 1.60 லட்சம் வரையிலான கடன் பெற எந்தவித அடமானமும் தேவையில்லை.

5. இந்த அட்டை வைத்துள்ள பயனாளர்களிடமிருந்து வங்கிகள் கடனுக்காக குறைந்த வட்டியே வசூலிக்கும்.

6. சாகுபடி செலவு மற்றும் அறுவடைக்கு பிந்தைய செலவுகளை ஆகியவற்றை கணக்கிட்டு, முதல்முறை கடனை தொகையை வங்கி அதிகாரிகள் நிர்ணயிப்பார்கள்.

7. குறைந்த வட்டியில் கடன் வழங்குவதோடு மட்டுமல்லாமல் கடன் அட்டையின் மூலம் கடன் பெற்றுள்ள விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிற்களுக்கும் பயிற் காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு வழங்கப்படும்.

8. கடன் அட்டை கணக்கில் உள்ள விவசாயிகளின் சேமிப்பு பணத்திற்கு கூடுதல் வட்டியும் வழங்கப்படும்.


உழவர் கடன் அட்டை சிறப்புகள்:

  • விவசாய கடன் அட்டை (கிசான் கிரிடிட் கார்டு) திட்டம்,  அனைத்து வணிக வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருவதால் விவசாயிகள் அருகிலுள்ள வங்கிகளை அணுகி தங்களை இணைத்து கொள்ளலாம்.

  • பிரதம மந்திரி சம்மன் நிதி திட்டத்தில் பயன் பெற்று வரும் விவசாயிகளும், விவசாயக் கடன் அட்டை பெற்றுக்கொள்ளலாம்.  இதுவரை பெறாதவர்கள் அருகில் உள்ள  தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அல்லது சேமிப்பு கணக்கு உள்ள வங்கிகளை  நேரடியாக தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விவசாய கடன் அட்டையினை பெற்றுக் கொள்ளலாம்.

  • செயல்படாத உழவர் கடன் அட்டை உள்ள விவசாயிகள் வங்கிக் கிளையை அணுகி புதிய கடன் அட்டை அல்லது பழைய அட்டையை செயல்படுத்த விண்ணப்பிக்கலாம். மேலும் கடன் வரம்பிணை அதிகரிக்க அனுமதி கோரலாம்.

  • உழவர் கடன் அட்டைதாரர்கள் இதுவரை கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கான கடன் தொகையை வரம்பில் இணைக்க வங்கிக் கிளையை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments