ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய விதி அமல்.. இனி ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் இது கட்டாயம்

Follow Us

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய விதி அமல்.. இனி ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் இது கட்டாயம்

 தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) கீழ், இந்திய அரசாங்கம் கோடிக்கணக்கான தகுதியுள்ள குடிமக்களுக்கு ரேஷன் கார்டு மூலம் மலிவான அல்லது இலவச ரேஷனை வழங்குகிறது.

இந்தக் கார்டு உணவுப் பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல், அடையாளச் சான்றாகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தின் பலன்கள் தகுதியானவர்களுக்கு மட்டுமே கிடைப்பதை உறுதிசெய்ய, அரசு ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ரேஷன் கார்டுகளுக்கான e-KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் e-KYC அப்டேட் செய்ய வேண்டும்:


புதிய வழிகாட்டுதல்களின்படி, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் ஒருமுறை e-KYC-யை புதுப்பிக்க வேண்டும். பல பயனர்கள் கடைசியாக 2013-ல் e-KYC செய்துள்ளனர், எனவே அதை இப்போது மீண்டும் புதுப்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதில் நல்ல செய்தி என்னவென்றால், e-KYC செயல்முறை முன்பை விட மிகவும் எளிதாகியுள்ளது. மேலும் இதை வீட்டிலிருந்தே முழுமையாக ஆன்லைனில் செய்யலாம்.


வீட்டிலிருந்தே ரேஷன் கார்டு e-KYC செய்வது எப்படி?


உங்கள் மொபைலிலேயே e-KYC அப்டேட் செய்ய விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்:


- முதலில், உங்கள் போனில் Mera KYC மற்றும் Aadhaar FaceRD செயலிகளை பதிவிறக்கம் செய்யவும்.

- செயலியை ஓபன் செய்து, உங்கள் இருப்பிடத்தைச் (Location) சேர்க்கவும்.

- இப்போது உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, கேப்ட்சாவை (Captcha) நிரப்பவும்.

- மொபைலில் வரும் OTP மூலம் சரிபார்க்கவும்.

- திரையில் ஆதார் தொடர்பான அனைத்து விவரங்களும் தோன்றும்.

- இப்போது 'Face e-KYC' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

- கேமரா தானாகவே ஆன் ஆகும். உங்கள் முகத்தை படம் எடுக்கவும்.

- படம் எடுத்த பிறகு Submit பட்டனை அழுத்தவும்.

- இத்துடன் உங்கள் e-KYC வெற்றிகரமாக நிறைவடையும்.


e-KYC வெற்றிகரமாக முடிந்ததா என்பதை எப்படி அறிவது?


நீங்கள் e-KYC அப்டேட் முடித்தது, ரேஷன் கார்டு e-KYC சரியாக முடிந்ததா எனப்பார்க்க விரும்பினால், இந்த படிகளைப் பின்பற்றவும்:


- Mera KYC செயலியைத் திறக்கவும்.

- இருப்பிடத்தைச் சேர்க்கவும்.

- ஆதார் எண், கேப்ட்சா மற்றும் OTP-யை உள்ளிடவும்.

- திரையில் Status: Y என்று காட்டினால், e-KYC வெற்றிகரமாக முடிந்தது.

- திரையில் Status: N என்று காட்டினால், e-KYC இன்னும் முழுமையாக முடியவில்லை என அர்த்தம்


ஆஃப்லைன் e-KYC அப்டேட் எப்படி செய்யலாம்?


மொபைல் செயலி மூலம் e-KYC செய்வதில் சிரமம் இருந்தால், கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் உங்களுக்கு அருகிலுள்ள ரேஷன் கடை அல்லது CSC (Common Service Center) மையத்திற்குச் சென்றும் இந்தச் செயல்முறையைச் செய்யலாம். இதற்கு உங்கள் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டை எடுத்துச் சென்றால் போதுமானது.

Post a Comment

0 Comments