செபி நிறுவனத்தில் உதவி மேலாளார் வேலை.. ரூ. 1,26,100 வரை சம்பளம்..! உடனே விண்ணப்பிங்க..

Follow Us

செபி நிறுவனத்தில் உதவி மேலாளார் வேலை.. ரூ. 1,26,100 வரை சம்பளம்..! உடனே விண்ணப்பிங்க..

 இந்தியப் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (SEBI) தனது பிரிவுகளில் உள்ள Grade A (Assistant Manager) அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் வரவேற்கிறது. வங்கி, நிதி மற்றும் சந்தை ஒழுங்குமுறை துறைகளில் பணியாற்ற ஆர்வம் கொண்ட பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

                                                                             


பணி: Assistant Manager(Officer Grade-A)


பிரிவு: பொது(General) – 56


தகுதி: சட்டம். சிஏ, சிஎப்ஏ, சிஏஐ பட்டம் அல்லது பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பிரிவு: சட்டம் (Legal) – 20


தகுதி: சட்டப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பிரிவு: Information Technology – 22


தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணினி அறிவியல், ஐடி பிரிவில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பிரிவு: Research – 4


தகுதி: பொருளாதாரம், வணிகம், வணிக நிர்வாகம், பொருளாதார அளவியல், அளவீடு பொருளாதாரம், நிதி பொருளாதாரம், கணிதம், வணிக பொருளாதாரம், விவசாய பொருளாதாரம், வணிக பகுப்பாய்வு போன்ற ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பிரிவு: Official Language – 3


தகுதி : ஹிந்தி மற்றும் ஆங்கில பாடங்களுடன் முதுகலை பட்டம் அல்லது சமஸ்கிருதம், பொருளாதாரம், வணிகம் மற்றும் ஹிந்தி பாடங்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பிரிவு: Electrical – 2


தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பிரிவு: Civil – 3


தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு: வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.


சம்பளம்: தேர்வாகும் நபர்களுக்குமாதம் ரூ. 62,500 முதல் 1,26,100 வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.


எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்கும் முறை: https://www.sebi.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,000, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.11.2025.

Post a Comment

0 Comments