மயிலாடுதுறை மாவட்டத்தில் வன்முறைக்கு உள்ளான பெண்களுக்கு உதவும் ஒரு நிறுத்தம் மையம் (One Stop Centre) மூலம் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்த மையத்தில் பணியாற்ற மைய நிர்வாகி மற்றும் முதுநிலை ஆலோசகர் பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிக முறையில் தகுதியானவர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பணியிட விபரம்
1. மைய நிர்வாகி (Centre Administrator) 1 பணியிடம்
தொகுப்பூதியம்: ரூ.35,000/-
தகுதி: MSW (சமூகப்பணி) / MSc (மனோவியல்) / MA (சமூகவியல்) / சட்டப்படிப்பு - 4 ஆண்டுகள் அனுபவம்
வயது வரம்பு: 35 வயது வரை
2. முதுநிலை ஆலோசகர் (Senior Counselor) 1 பணியிடம்
தொகுப்பூதியம்: ரூ.22,000/-
தகுதி: MSW / MSc (மனோவியல்) / MA (சமூகவியல்) / சட்டப்படிப்பு - 2 ஆண்டுகள் அனுபவம்
வயது வரம்பு: 35 வயது வரை
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை www.mayiladuthurai.nic.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். அல்லது மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பப் படிவங்களைப் பெறலாம்.
கடைசி நாள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 25, 2025 (மாலை 5.45 மணிக்குள்) கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட சமூக நலன் அலுவலகம், 5-ஆம் தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், பால்பண்ணை, மூங்கில்தோட்டம், மயிலாடுதுறை – 609 305.
மேலும் தகவல்களுக்கு:
தொலைபேசி: 04364-212429
இந்த மையம், மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வன்முறையால் தனியார் மற்றும் பொது இடங்களில் குடும்ப, சமூகம் மற்றும் பணியிடத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், வயது, சாதி, கல்வி, திருமணநிலை, இனம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் ஆதரவு இல்லாமல் பாலியல் துன்புறுத்தல், பாலியல் தாக்குதல் வன்முறை, போக்குவரத்தின் போது வன்முறை, ஆசிட் தாக்குதல் ஆகியவற்றிற்கு உட்பட்ட பெண்களுக்கு ஆதரவு தரும் (One stop centre ) மையமாகவும் செயல்படும்.
பாதிக்கப்பட்ட பெண்கள் 18 வயதிற்குமேல் உள்ளவர்களுக்கு இலவசமாக 10 நாட்களுக்கு மட்டும் தங்கும் வசதி, இலவச உணவு, மருத்துவ வசதி, இலவச உளவியல் மற்றும் காவல்துறை உதவி அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மையம் 24x7 என்ற முறையில் 24 மணிநேரம் செயல்படும்
0 Comments