தமிழ்நாடு மருத்துவத்துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான திறன்மிகு உதவியாளர் கிரேடு - 2 பதவிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்
பிட்டர் மற்றும் வெல்டர் தொழிற்பிரிவில் திறன்மிகு உதவியாளர்கள் நிரப்பப்படுகிறார்கள். தமிழ்நாடு பொது சுகாதாரம் சார்பு சேவையின் கீழ் இப்பணியிடங்கள் வருகிறது. அந்த வகையில், பிட்டர் பிரிவில் 20 காலிப்பணியிடங்களும், வெல்டர் பிரிவில் 1 காலிப்பணியிடம் நிரப்பப்படுகிறது.
பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
Skilled Assistant Grade - II (Welder) 1
Skilled Assistant Grade-II (Fitter) 20
மொத்தம் 21
வயது வரம்பு
01.07.2025 தேதியின்படி, பிட்டர் பிரிவு திறன்மிகு உதவியாளர் பதவிக்கு குறைந்தபட்சம் 18 வயது நிறைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. ஒசி பிரிவினருக்கு அதிகபடியாக 32 வயது வரை இருக்கலாம். இதுவே மாற்றுத்திறனாளிகள் 42 வயது வரையும், முன்னாள் ராணுவத்தினர் 48, கணவரை இழந்தவர்களுக்கு வயது வரம்பு கிடையாது.
வெல்டர் பிரிவில் உள்ள பணியிடம் எஸ்டி வகுப்பு பிரிவிற்கானது. அதற்கு அதிகபடியாக 59 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி
11.06.2025 தேதியின்படி, பிட்டர் பிரிவு பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மோட்டர் வாகனத்தில் NTC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், NAC- தேசிய தொழிற்பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
வெல்டர் பிரிவு பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NAC அல்லது NTC பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 8 கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் கிடையாது. கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். 10-ம் வகுப்பு கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் 40%, சான்றிதழ் படிப்பில் 60% மதிப்பெண்கள் என எடுத்துகொள்ளப்படும். விண்ணபிக்கும் நபர்களில் இருந்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் திறன்மிகு உதவியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். முதலில் பதிவு செய்து, பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
இதற்கு ஜூன் 11-ம் தேதி முதல் விண்ணப்பம் தொடங்கிய நிலையில், ஜூலை 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள்
விவரம் தேதிகள்
விண்ணப்பம் தொடங்கப்படும் நாள் 11.06.2025
விண்ணப்பிக்க கடைசி நாள் 01.07.2025
தேர்வு செய்யப்படும் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
0 Comments