மக்களிடையே சேமிப்பு பழக்கம் அதிகரிக்க மத்திய அரசு, போஸ்ட் ஆபீஸில் பல சேமிப்பு திட்டங்கள், ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள், ஆர்டி முதலீட்டு திட்டங்களை செயல்பாட்டில் வைத்துள்ளது.
அதில் ஒரு திட்டம் குறித்து இப்போது பார்க்கலாம். வெறும். ரூ. 50 சேமிப்பதன் மூலம் ரூ. 1 லட்சத்தை சொந்தமாக்குவது எப்படி? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய அஞ்சல் சேமிப்பில் RD என்று சொல்லப்படுகிற ரெக்கரிங் டெபாசிட் திட்டங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் ஒரு பெரிய தொகையை உங்களுக்காகவோ அல்லடு உங்கள் குடும்பத்திற்காகவோ சேமிக்கலாம்.
தினமும் 50 ரூபாய் சேமித்தால் மாதத்திற்கு 1500 ரூபாய். இந்த 1500 ரூபாயை போஸ்ட் ஆபீஸ் RD கணக்கில் போட வேண்டும். இந்த திட்டத்தில் 5 ஆண்டுகள் முதல் சேமிக்கலாம். மாதம் ரூ. 1500 தொகையை 5 ஆண்டுகளுக்கு விடாமல் ஒவ்வொரு மாதம் டெபாசிட் செய்ய வேண்டும். கண்ணுக்கு தெரியாமல் உங்களுக்கான தொகை ஒரு பக்கம் சேர்ந்து கொண்டிருக்கும். இன்றைய சிறு தொகை சேமிப்பு, நாளைக்கு உங்களுக்கு பெரிய தொகையாக மாறி, அவசர நேரத்தில் கைக்கொடுக்கும்.
அதாவது 5 ஆண்டுகளுக்கு மாதம் மாதம் 1500 ரூபாயை சேமித்து வந்தால், 5 ஆண்டுகளில் 90,000 ரூபாயை டெபாசிட் செய்திருப்பீர்கள். அதற்கு வட்டி வருமானமாக 17,050 ரூபாய் கிடைக்கும். எனவே வட்டியையும், முதலீட்டையும் சேர்த்து 1,07,050 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.RD திட்டத்தில் மத்திய அரசு 6.7 சதவீத வட்டி விகிதம் வழங்குகிறது. . தொடர்ந்து 12 தவணைகளை செலுத்திய பிறகு டெபாசிட் செய்த தொகையில் 50% வரை கடனாக பெறலாம்.
முதல் 5 ஆண்டுகள் சேமிப்பு முடிந்த பின்னர், அந்த முதிர்வு தொகையை அப்படியே அடுத்த 5 ஆண்டுகளுக்கும் RD திட்டத்தை நீட்டிக்கும் வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் கணக்கை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மூடலாம். இந்த திட்டத்தில் டெபாசிர் செய்பவர்களுக்கு பிரிவு 80-சியின் கீழ் வரி விலக்கும் வழங்கப்படுகிறது.
1 Comments
On line la RD pay pandra options irukka bro...?
ReplyDelete