கிரைய பத்திரம் பண்ண போறீங்களா? பத்திரப்பதிவு ரூல்ஸ் மாறுது.. யார் யாருக்கு பொருந்தும்: பதிவுத்துறை

Follow Us

கிரைய பத்திரம் பண்ண போறீங்களா? பத்திரப்பதிவு ரூல்ஸ் மாறுது.. யார் யாருக்கு பொருந்தும்: பதிவுத்துறை

 பத்திரப்பதிவு சம்பந்தமான புகார்களை பதிவுத்துறைக்கு மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தெரிவிக்கலாம்.

                                                                             


லஞ்சம் கேட்பது குறித்த புகாராக இருந்தால், 94984 52110, 94984 52120, 94984 52130 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். அத்துடன் ctsec@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் என்று ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், பத்திரங்களை பதிவு செய்வதில், சார் பதிவாளர்களிடம் குழப்பம் நிலவுவதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

சார் பதிவாளரால் மறுக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவு பெற்று வரும் பத்திரங்களை தற்காலிக எண் அடிப்படையில் பதிவு செய்ய, புதிய நடைமுறைகளை பதிவுத்துறை பிறப்பித்துள்ளது.


பதிவுத்துறை, பொதுமக்களின் நலன்கருதி பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருகிறது.. அந்தவகையில், பத்திரப்பதிவு தொடர்பான புகார்களைப் பதிவு செய்ய வேண்டுமானால், பதிவுத்துறை கட்டுப்பாட்டு அறை, வாட்ஸ்அப், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம்.

பத்திரப்பதிவு நடைமுறை


அதேபோல, போலி பத்திரப்பதிவு ரத்து கோரி மாவட்ட பதிவாளரிடம் புகார்களை அளிக்கலாம்... சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும்கூட, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யக் கோரி மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கலாம் என்று ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியிருந்தது.

பொதுவாக, வீடு, மனை வாங்குவோர் தாக்கல் செய்யும் கிரைய பத்திரங்களில் ஏதாவது குறைகள் இருந்தால், சார் பதிவாளர்கள் பத்திரங்களை பதிவுக்கு ஏற்க மாட்டார்கள்.. இதுகுறித்து சொத்து வாங்கும் நபர், சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம். அங்கும் தீர்வு ஏற்படாத நிலையில், கோர்ட்டை நாடலாம். அப்படி கோர்ட்டை நாடும் நிலையில், சம்பந்தப்பட்ட பத்திரங்களை பதிவு செய்ய, நீதிமன்றம் உத்தரவிடுகிறது.


பதிவுத்துறை புதிய உத்தரவு


அப்போது, இந்த பத்திரங்களை பதிவு செய்வதில், சார் பதிவாளர்களிடம் குழப்பம் ஏற்படுவதாக தெரிகிறது.. இது தொடர்பாகதான், பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார். அந்த உத்தரவில் உள்ளதாவது:

நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் பத்திரங்களை, நிர்வாக மாவட்ட பதிவாளரின் ஆணை பெற்று, அதன் அடிப்படையில், டிஐஜி பரிந்துரை பெற்ற பிறகு, சார் பதிவாளரால் ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும். அதன்பின், திட்ட ஒருங்கிணைப்பாளர் வாயிலாக, கணினியில் அந்த பத்திரம் தொடர்பான விபரங்களை மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும்.


தற்காலிக எண்கள்


இதையடுத்து, ஏற்கனவே பதிவுக்கு மறுக்கும் போது, அந்த பத்திரத்துக்கு அளிக்கப்பட்ட தற்காலிக எண்ணை மீண்டும் ஒதுக்க, சார் பதிவாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவுக்கு தற்காலிக எண் ஒதுக்கப்படாத, தானாக திரும்ப பெறப்பட்ட பத்திரங்களுக்கு, இந்த நடைமுறை பொருந்தாது.

அங்கீகாரமில்லாத மனை தொடர்பான பத்திரங்களுக்கும், இந்த நடைமுறை பொருந்தாது. இந்த நடைமுறைகளை முழுமையாக கடைபிடிக்க, மாவட்ட பதிவாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.





Post a Comment

0 Comments