புதிய தொழில் முனைவோர்கள் கடனுதவி பெற விண்ணப்பிப்பது எப்படி?

 வங்கிகளில் கடனுதவி பெற்று தொழில் முனைவோர்கள் தங்களது தொழில்களை முன்னேற்றத்தில் கொண்டு செல்ல பல்வேறு வழிமுறைகளை மத்திய,மாநில அரசுகள் சார்பில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

                                                                      


தமிழ்நாடு அரசால் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்காக "புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்" (நீட்ஸ்) 2012-ஆம் ஆண்டிலிருந்து மாவட்ட தொழில் மையம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க பன்னிரெண்டாம் வகுப்பு (+2) தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டம், பட்டயம், ஐடிஐ/தொழிற்கல்வி ஆகிய கல்வித் தகுதி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் 3 வருடத்திற்கு குறையாமல் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். பொதுப் பிரிவினர் 21 முதல் 45 வயது வரையிலும் மற்றும் சிறப்பு பிரிவினர் (SC/ST, BC, MBC, பெண்கள், மாற்று பாலினத்தவர்கள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்) 21 முதல் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


இத்திட்டத்தின் கீழ், உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த பொருளாதார ரீதியாக சாத்தியப்படக்கூடிய தொழில்கள் துவங்க ரூ.10.00 இலட்சம் முதல் ரூ.5.00 கோடி வரை வங்கிக் கடனுதவி வழங்க பரிந்துரை செய்யப்படும். கடனுதவி பெற்று தொழில் துவங்கும் தொழில் முனைவோர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75.00 இலட்சம் மானியம் வழங்கப்படும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் கடனை திருப்பி செலுத்தும் மொத்த காலத்திற்கும் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள தொழில் முனைவோர்கள் https://www.msmeonline.tn.gov.in/needs. என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து தொழிற்கடன் பெறலாம். இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தேனி அவர்களை நேரிலோ அல்லது 04546-252081, 89255-34002 மற்றும் 89255-33998 ஆகிய தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments